தித்திக்கும் தேனருவி

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
548
@Mrs Beena loganathan

தித்திக்கும் தேனருவி


காதலாய் கலந்த இரு உள்ளங்கள்
கட்டுப்பாடு கூறி
காலம் பிரித்தது....

காத்திருப்பின் கனவுகளில் கூட
கைபிடிக்காத நொடி துடித்தது....

குரலில் தேன் கலந்த
கன்னியின் மேல்
காதல் கொண்ட தேவதிரன்
கண்ணாலே காதல் கோட்டை கட்டிய தேனருவி....

காணாமல் கூட
காதல் காத்து
கனிந்த மனதில் கனவாய் நின்றாள் அருவி....

காட்டின் கடினக் கட்டுப்பாட்டில்
காணாமல்
காத்திருந்த காதல்...

குடும்பம் காக்க வேண்டும் என்று
காதலை கண்ணீரில் காத்தது....


கடமைக்காக காதலியை விட்டு
காலத்தின்
கையில் தந்து
காத்து நின்றான்....


காலம் கடந்து
காயம் பெருகி
கண்ணீரில் கதைகள் கரைந்தபோது....

காதல் காயத்தை காத்திட
இயற்கை சீற்றத்தை காத்திட்ட கரங்களை
கடவுளாக வேண்டி
கனிந்தது மனம்....


கண்மணியின் வலி கண்டு
கல்லான இதயம் கூட கரைந்தது....

காதலை கைவிடாத இயற்கை
கட்டுப்பாடு கரைந்த அந்த நொடி
காதல் கைகோர்த்து மலர்ந்தது.....

காயங்களைக் கடந்து வந்த காதல்
காலமெல்லாம் தேவ் தந்த காதலில்
கனிந்துருகிய
திருமதி தேனருவி தேவதிரன்
தித்திக்கும் தேனருவி...
 
Top