விநோ❤️தர்ஷி ( முதல் பாகம்)
பெற்றவரின் பணி பிடிக்காது போக
பார்வையில் இருந்து
பிரிந்து விட
பிடித்து வைக்கும்
பந்தம் தாய்....
பிடிக்காத பாதையில்
பதிந்த புண்களுடன்
பாசத்தை பிடித்து
பிழைத்தாள் தாயுடன்...
கடமை அழைத்த போதும்
கன்னியின் காதல் உரைத்த போதும்
கண்ணியம் வைத்து
ஒதுக்கி வைத்த போதும்
கட்டுப்பாடு காத்த
காவலன்....
காணாத
காதலை
காதலி வைத்தே
காப்பாறிக் கொண்டான்....
வார்த்தையின்றி
வளர்ந்த விழிகள்
விண்ணப்பம் விட்ட
வஞ்சியை தவிர்க்க...
விதியின் வழியில்
வந்த விசித்திரமான
விருப்பம்....
பெயரில்லா நேசம்
பார்வைகள் பதிந்த
பிணைப்பு புரியாமல்
பரவிய பாசம்
பின்னர் பிரிவாகி
புண்ணானது.....
காணாத காதல்
கைவிட
காரணம் கேட்காமல்
காலம் கட்டாயம்
கல்யாணம் கட்டியது....
வலியுடன் வாழ்ந்த
விழிகள் உண்மை
வெளிப்பட...
விதியின்
விளையாட்டு
விட்டுப்போன
விருப்பம்
வெளிச்சமானது....
பிடிவாதம் போட்ட
பந்தம் பின்னர்
புரிதலாய் பரிமாறி
பாசமாய் பெருகி
புது பொலிவானது....
காயங்கள் கலந்த
கணங்கள்
கனிவாய் குணமாய்
காதலாய் கூடி
கனவான வாழ்வு நினைவானது....
விழுந்த விழிகள்
விழித்துக் கொள்ள
வலிகள் மறைந்து
வாழ்க்கை வசந்தம்
வந்து விரிந்தது
விநோ❤️தர்ஷி
வாழ்வில்
வெற்றியானது.....